மென்பொருள் உற்பத்தியில் முன்னனியில் இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது அதிரடியான செயல்பாடுகளால், அனைவருடைய விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கி, 2014 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், அதிக வருமானத்தைப் பெற்று கூடுதல் புள்ளிகளைப் பெற்றுள்ளது.
கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் குறைந்த லாபத்தை அடைந்தாலும், பல சிக்கல்களுக்கும், விமர்சனங்களுக்கும் நடுவில் இன்ஃபோசிஸ் அடைந்த சாதனைகளைக் கீழே பார்க்கலாம்.
வரி செலுத்திய பிறகும் (பிஎடி) அதிக வருமானம்
பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்ததைவிட, 2014 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இன்போசிஸ் நிறுவனம் வரியைச் செலுத்திய பிறகும் அதிகமான லாபத்தை பெற்றிருக்கிறது. அதாவது பல வல்லுனர்கள், இன்ஃபோசிஸ் ரு.2,300 கோடி அளவிற்கு லாபத்தைப் பெறும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் அவற்றைத் தவிடு பொடியாக்கி, வரியைக் கழித்த பிறகும், இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.2,374 கோடி லாபத்தை பெற்றிருக்கிறது.
இபிஐடி லாபமும் அதிகம்
வல்லுனர்களின் கருத்துக்களை பொய்யாக்கும் விதமாக, 2014 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இன்ஃபோசிஸ் 23.64 சதவீத இபிஐடி லாபத்தைப் பெற்றுள்ளது. இந்த லாப விகிதம் பலரும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகும்.
அமெரிக்க டாலர் வருமானத்தில் மாற்றமில்லை
2014ஆம் நிதியாண்டில் 7-10 சதவீத அமெரிக்க டாலர்களை வருமானமாக பெறவேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிர்வாகம் இலக்கு வைத்திருக்கிறது. தற்போது இந்த இலக்கில் எந்த ஒரு மாற்றத்தையும் இன்ஃபோசி்ஸ் செய்யவில்லை. ஆனால் இந்த இலக்கு மிகவும் குறைவான வளர்ச்சியைக் காட்டுகிறது என்று வல்லுனர்களும் மற்றும் நாஸ்காம் அமைப்பும் தெரிவிக்கின்றனர்.
க்ளவுட் மற்றும் பிக் டேட்டா
க்ளவுட் மற்றும் பிக் டேட்டா தொழில் நுட்பங்கள் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதால், இந்த தொழில் நுட்பங்களில், இன்ஃபோசிஸ் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த தொழில் நுட்பங்களில் ஏறக்குறைய 100 வர்த்தக நடவடிக்கைகளை இன்ஃபோசிஸ் மேற்கொண்டிருக்கிறது.
புதிய வாடிக்கையாளர்களை பெறுவதில் சாதனை
இன்ஃபோசிஸ் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பதிலும் சாதனை படைத்திருக்கிறது. அதாவது 66 புதிய வாடிக்கையாளர்களை இன்ஃபோசிஸ் பிடித்திருக்கிறது. அதனால் நாங்கள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
சம்பள உயர்வால் லாபம் குறைவு
இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு செய்திருப்பதால், வரும் காலாண்டுகளில் அதன் லாபம் குறையும் என்று எதிர்பார்க்கிறது. அதாவது வரும் காலாண்டுகளில் இந்த சம்பள உயர்வினால் இன்ஃபோசிஸ் நிறுனத்தின் லாபம் 300 புள்ளிகள் அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூக்கிவிட்ட சந்தை
இன்ஃபோசிஸ் நிறுவனத்தை சந்தைகளும் தூக்கிவிட்டிருக்கின்றன. அதனால் சந்தையில் அந்த நிறுவனம் 13 சதவீத பங்குகளை விற்பனை செய்திருக்கிறது. மேலும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நோக்கித் தங்கள் பார்வைகளை செலுத்த தொடங்கியிருக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications