கடந்த ஆண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது காலாண்டு நிதியறிக்கையை வெளியிடும் போது, அந்த நிறுவனத்தின் பங்குகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த கட்டுரையில் கடந்த 5 காலாண்டுகளில் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்க்கலாம். எனினும் அந்த நிறுவனத்தின் பங்குகளில் ஏற்றத்தைவிட சரிவே அதிகமாக காணப்படுகிறது.
ஜூலை 12, 2013
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் கௌரவமான லாபத்தை ஈட்டிய இன்ஃபோசிஸ், தனது காலாண்டு நிதியறிக்கையை வெளியிட்ட பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதன் மூலம் தேசிய பங்குச் சந்தையில் அதன் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.2804 கோடி அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.
ஏப்ரல் 12, 2013
2013 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருந்ததால் அதன் பங்குகளின் மதிப்பு 21 சதவீதம் அளவிற்கு கடும் வீழ்ச்சி அடைந்தது. அந்த நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.2295 கோடி அளவிற்கு மிகவும் குறைந்தது.
ஜனவரி 11, 2013
இந்த காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 16.79 சதவீத அளவிற்கு வளர்ச்சி அடைந்தது. 2013 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிதச் செயல்பாடுகள் நன்றாக இருந்ததால், 16.79 சதவீத வளர்ச்சியை இன்ஃபோசிஸ் பெற்றது.
அக்டோபர் 12, 2012
இந்த காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளில் 5.44 சதவீதம் சரிவு ஏற்பட்டது. 2012 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள் சரியாக இல்லாததால், அதன் பங்குகளின் மதிப்பு 5.44 சதவீதம் குறைந்து ரூ.2395 கோடி அளவிற்கு குறைந்தது.
ஜூலை 12, 2012
இந்த காலாண்டிலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவையே சந்தித்தன. அதாவது 2013 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள் சரியக இல்லாததால், அந்த நிறுவனத்தின் பங்குகளில் 8.36 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டு, அந்த நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.2264 கோடி அளவிற்கு குறைந்தது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications