இந்தியாவில் அனைத்து துறைகளிலும், பொருளாதாரம் பலத்த அடி வாங்கும் இந்நிலையில், நமது இந்திய ரயில்வே துறை ஒரு விதி விளக்காக விளங்குகிறது. இந்தியா ரயில்வே துறையில் கடந்த சில வருடங்களாக பல முன்னேற்றமும், மாறுதல்களையும் அடைந்து வருகிறது. இந்த மாற்றத்தில் முக்கிய இடம் பிடிப்பது, இரண்டு அடுக்கு ரயில் பெட்டிகள். சில மாதங்களுக்கு முன்பு சென்னை முதல் பெங்களூர் வரை செல்லும் தென் இந்தியாவில் முதல் இரண்டு அடுக்கு ரயில் சேவை துவங்கப்பட்டது, இது மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
இந்திய ரயில்வே துறை கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகப்படியான வருவாயை ஈட்டியது. மேலும் இங்கே ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை அடைந்த வருவாயை பட்டியலிட்டு உள்ளோம்.
மொத்த வருவாய்
இந்திய ரயில்வே துறையின் மொத்த வருவாயாக கடந்த வருடம் (2012) ஏப்ரல் - ஜூன் மாதங்களில் சுமார் 29,926.67 கோடியை வருவாயாக ஈட்டியது. ஆனால் இந்த வருடத்தின் (2013) வருவாய் 33,497.09 கோடியாகும். இது கடந்த வருடத்தை விட 11.93% அதிகமாகும்.
சரக்குகள் ரயில் வருவாய்
இந்திய ரயில்வே துறைக்கு சரக்கு ரயில்களின் முலம், 2012 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் வருவாய் சுமார் 21,211.41 கோடியாக இருந்தது, இந்த வருடம் (2013) 23,193.98 கோடியாகும். இது கடந்த வருடத்தை விட 9.35% அதிகமாகும்.
பயணிகள் ரயில் வருவாய்
ரயில் பயணிகளின் முலம், கடந்த வருடம் 7,462.17 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியது, இது 2013ஆம் வருடத்தில் 16.92% அதிகரித்து 8,724.66 கோடியாக உள்ளது.
பதிவு பயணிகளின் வருவாய்
மேலும் பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் முலம், 2012ஆம் ஆண்டு 744.73 கோடியை வருவாயாக ஈட்டியது. இந்த வருடம் 36.21% அதிகரித்து 1,014.36 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.
இதர வருவாய்
இந்திய ரயில்வே துறைக்கு இதர வருவாயாக சுமார் 2,100.20 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த வருடத்தை விட 0.69% குறைந்துள்ளது, கடந்த வருடம் 2,114 கோடியாகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications