இந்தியா பொருளதாரம் பல சிக்கல்களை சந்தித்து கொண்டிற்கும் இந்நிலையில் மேலும் ஒரு அடியாக, வர்த்தக சந்தையில் கடந்த ஜூன் மாதத்தில் மிகவும் குறைவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2013 -14 நிதியாண்டின் கடந்த ஆறு மாதத்தில் ஈக்விட்டி, கடன் பத்திரங்கள், மற்றும் பங்குகளில் மிகவும் குறைவாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முலம் அரசுக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது.
கடந்த ஒர் ஆண்டில் இந்திய வர்த்தக சந்தையில் ஈக்விட்டி, கடன் பத்திரங்கள், மற்றும் பங்குகளில் முலம் முதலீடு செய்த தொகையை இப்பொழுது பார்ப்போம்.
Q3-2012
கடந்த ஆண்டு 3ஆம் காலண்டின் ஜூலை மாதத்தில் 1,29,586 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் 1,41,710 கோடியும், செப்டம்பர் மாதத்தில் 1,46,600 கோடியும் முதலீடு செய்யப்பட்டது.
Q4-2012
அதைபோல் கடந்த ஆண்டு 4ஆம் காலண்டின் அக்டோபர் மாதத்தில்1,75,829 கோடியும், நவம்பர் மாதத்தில் 1,77,164 கோடியும், டிசம்பர் மாதத்தில் 1,51,084 கோடியும் முதலீடு செய்யப்பட்டது.
Q1-2013
இந்த வருட துவக்கதில் அதிகப்படியான முதலீட்டை எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த ஆண்டை வித இந்த ஆண்டு குறைவாகவே முதலீடு செய்யப்பட்டது. ஜனவரி மாதத்தில் 1,62,139 கோடியும், பிப்ரவரி மாதத்தில் 1,64,271 கோடியும், மார்ச் மாதத்தில் 1,47,905 கோடியும் முதலீடு செய்யப்பட்டது.
Q2-2013
இந்த வருடத்தின் 2ஆம் காலண்டில் பல சிக்கல்களை சந்தித்தது நம் இந்திய பொருளாதாரம். இருந்தலும் ஏப்ரல் மாதத்தில் 1,57,578 கோடியும், மே மாதத்தில் 1,68,263 கோடியும் முதலீடாக பெற்றது. ஆனால் ஜூன் மாதத்தில் அன்னிய முதலீடு வெளியேறுதல், ரூபாய் மதிப்பின் பாதிப்பு மற்றும் தங்கத்தின் விலை குறைவால் பங்கு சந்தையில் நிலைமை தலைகீழாக மாறியது. இதனால் ஜூன் மாதத்தில் 1,47,498 கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டது.