ரிசர்வ் வங்கி பணபுழக்கத்தை இருக்கவும், குறைந்த கால நிதிகளின் வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கைகளில் இடுப்பட்டுள்ளது, இதனால் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், சிமெண்ட் மற்றும் எஃகு துறைகளில் இருக்கும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று மதிப்பீட்டு நிறுவனமான கரிசில், இந்திய ரிசர்வ் வங்கியை எச்சரித்துள்ளது.
ஆர்பிஐ கடந்த இரண்டு வாரங்களில், குறைந்த கால நிதிகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியது மேலும் வங்கிகள், சென்டரல் வங்கியின் எல்ஏஎஃப் (LAF) முலம் பெறும் கடன்களையும் தடை செய்துள்ளது மற்றும் தினசரி CRR தேவைகளையும் உயர்த்தியது. இதனால் நிறுவனங்கள் நாணய சந்தையில் செய்யப்படும் வர்த்தகத்தை குறைத்து கொண்டது.
சென்டரல் வங்கியின் இந்த நடவடிக்கையின் முலம், பணச் சந்தையில் மாற்று விகிதங்களின் ஏற்ற இறக்கத்தை தடுத்து, ஒரு நிலையானதன்மைக்கு கொண்டு வர முடியும் என நம்புகிறது. பணபுழக்கத்தை இதற்கு மேல் இருக்கினால் கிரெடிட் மதிப்பீடு மிகவும் குறைந்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.