இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி செலுத்த தயாராக இருங்க!!!

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி செலுத்த தயாராக இருங்க!!!
இந்திய அரசாங்கம் அதன் நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமன் செய்ய முடிவெடுத்தால், இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களான சொகுசு கார்கள், மொபைல்கள், டேப்லட்டுகள், மடிக்கணிணிகள் மற்றும் பல பொருட்களுக்கு கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

உலக பொருளாதார நிலைமை மேம்படும் வரை ஏற்றுமதி மந்தமாக தான் இருக்கும் என்பதுதான் பொதுவான கருத்து. இதனால் ஏற்றுமதியை பற்றாக்குறையை ஈடுகட்ட இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும்படியான யோசனைகளை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு தங்க இறக்குமதியை குறைக்க மேலும் நடவடிக்கைகளை கொண்டு வரலாம் என்கின்றனர் நிதி அமைச்சக அதிகாரிகள். இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாகுறை 88 பில்லியன் யுஎஸ் டாலராக உள்ளது. இது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதம் ஆகும். இது அரசின் இலக்கைவிட விட இரு மடங்கு ஆகும்.

தற்போது மொபைல் தொலைபேசிகளுக்கு 6 சதவீதம் இறக்குமதி வரி உள்ள நிலையில் டாப்லேட், கணிணிகள் மற்றும் மடி கணிணிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீதம் இறக்குமதி வரியை ஈர்க்க கூடும். கடந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 2000 ரூபாய்க்கு அதிகமான மொபைல் தொலைபேசிகளுக்கு 1 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரி விதித்தார். கடந்த ஆறு மாதங்களில் தங்கம் இறக்குமதி வரி 4 சதவீதத்தில் இருந்து இரண்டு மடங்காக சுமார் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

கணிணிகள், மடிக்கணிணிகள் மற்றும் கைக்கணிணிகளின் இறக்குமதி மதிப்பு 2009-2010ம் ஆண்டில் யுஎஸ் டாலர் 550 மில்லியன் டாலராக இருந்தது. இது 2012-2013ம் ஆண்டில் 1.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பற்றக்குறையை சமன் செய்வதற்காக மொபைல்கள், டேப்லட்டுகள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+