வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை உடனடியாக ஆதார் எண்ணை சமர்ப்பிக்க அணுகுமாறு நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. துரிதமான முறையில் டைரக்ட் பெனிபிட் ட்ரான்ஸ்பர் (DBT) திட்டம் செயல்பட தடையில்லா பண மாற்ற பயன் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யவே நிதி அமைச்சகம் இதனை கேட்டுக்கொண்டுள்ளது.
நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "வாடிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய ஆதார் எண்ணை அவர்களின் வங்கி கணக்கோடு இணைக்குமாறு வங்கிகளின் தலைவர்கள் அனைவரையும் அறிவுறுத்த இன்று என் அலுவலக பணியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
DBT திட்டம்
DBT திட்டம் தற்போதைய நடைமுறையை பெரிதளவில் மாற்றும் என்று கூறும் அவர், "ஆதார் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைக்கும் வேலை 80% முடிவடையும், அது சாதிக்கக் கூடிய ஒரு அளவீடு. மேலும் இது தொடர்பாக இன்று வெளியேறும் எங்கள் குழுவின் முயற்சியால் இதர மாவட்டங்களிலும் இந்த பனி வேகமாக முடிவடையும்". என்றும் கூறியுள்ளார்.
சிலிண்டர் மானியம்
சிலிண்டர் (LPG) மானியம் மாறுதலை பற்றி அவர் கூறுகையில், "இது சுலபமாக மாற்றக் கூடிய மானியம் தான். எண்ணெய் நிறுவனங்களுக்கு பணம் கட்டக் கூடியது ஒருவர் மட்டுமே; அது இந்திய அரசாங்கம் மட்டுமே." சிலிண்டர் மானியம் பற்றி அவர் மேலும் கூறுகையில், இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் அது திரும்பி பெற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
DBT திட்டத்தின் லட்சியம்
DBT திட்டத்தின் லட்சியமே பணத்தை வங்கி மூலமாக பரிமாற்றம் செய்வது தான். அதற்கு வங்கியில் தற்போது இருக்கும் முறையையும் சேர்த்து ஆதார் பெரிய தளமாக துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.
உணவு மற்றும் உரத்திற்கான மானியம்
DBT திட்டம் ஜூலை 1 முதல் 121 மாவட்டங்களில் செயல்பட தொடங்கியுள்ளது. உணவு மற்றும் உரத்திற்கான மானியம் மாறுதலுக்கும் கூட DBT செயல்பாடு விரிவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications