போலியான முதலீட்டுத் திட்டங்களை நடத்தி வரும் நிறுவனங்களுக்கு செக்: சச்சின் பைலட் அதிரடி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போலியான முதலீட்டுத் திட்டங்களை நடத்தி வரும் நிறுவனங்களுக்கு செக்: சச்சின் பைலட் அதிரடி!!
நாட்டின் வளர்ச்சி மந்தமாக உள்ள தற்போதைய நிலையில், சீர்த்திருத்தங்களை துரிதமாக முடுக்கிவிட தீர்மானித்திருக்கும் அரசு, போலியான முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிறுவனங்களை கையும் களவுமாகப் பிடிக்கும் நோக்கில், நிறுவனங்களுக்கான புதிய மசோதாவில் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மிகவும் கண்டிப்பு காட்ட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாக கார்ப்பொரேட் அஃபயர்ஸ் அமைச்சரான திரு சச்சின் பைலட், ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

"இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் யாதெனில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் எந்த ஒரு நிறுவனமும் பணம் சம்பாதிப்பதைத் தடுப்பதோடு ஏதேனும் நலத்திட்டம் என்ற போர்வையின் கீழ் கூட்டு முதலீட்டுத் திட்டங்களை செயல்படச்செய்து அதன் மூலம் பணம் பண்ணுவதை தடுக்க வேண்டும் என்பதே ஆகும்." என்றும் திரு பைலட் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், செபிக்கு தற்போது அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, பொன்ஸித் திட்டங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் போலி திட்டங்களை தடை செய்து, அந்நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதமான முறையில் நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"அனைத்திலும் ஒரு ஒழுங்குமுறை கட்டாயமாக்க் கடைபிடிக்கப்படுவதான ஒரு சூழல் இருப்பதை உறுதி செய்வதோடு, மக்கள் தாங்கள் அரும்பாடுபட்ட பணத்தை யாரிடமேனும் ஏமாந்து விடாமல் இருப்பதற்கும் பாடுபட்டு வரும் செபியின் முயற்சிகள் அனைத்திலும் கார்ப்பொரேட் அஃபயர்ஸ் அமைச்சகம் உறுதுணையாக இருக்கும்." என்றும் சச்சின் பைலட் உறுதியளித்துள்ளார்.

இதற்கு இடையில், நிறுவனங்களுக்கான மசோதா பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt taking measures to check companies running fraudulent investment schemes: Sachin Pilot

The government, which is looking to fast-track reforms as growth slows down, has prescribed for strict enforcement of rules and regulations in the new companies bill to crack down on companies operating fraudulent investment schemes, said corporate affairs minister, Sachin Pilot
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X