ஏ.டி.எம். (ATM) மெஷினில் பணம் இல்லையென்றால், வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்த தொடங்கும் முன்னரே அதை ஒரு செய்தியாக அவர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளதாக ஊடகங்களின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்த தகவலை பற்றி ரிசர்வ் வங்கி கூறுகையில், "ஏ.டி.எம்-மில் பணம் இல்லையென்ற செய்தியை வாடிக்கையாளர் பரிமாற்ற நடவடிக்கை தொடங்கும் முன்னரே அவருக்கு தெரிவித்து விட வேண்டும்."
இத்தகவலை ஏ.டி.எம் மெஷினின் திரையிலோ அல்லது வேறு வடிவிலோ தெரிவிக்கப் பட வேண்டும்.
மேலும் ஏ.டி.எம் மெஷினின் அடையாள எண்ணையும் அந்த மையத்தில் குறிப்பிட வங்கிகளுக்கு வலியுறித்தியுள்ளது. இதனால் குறைகளையோ கருத்துகளையோ வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் போது அந்த மெஷினுடைய எண்ணையும் குறிப்பிடலாம்.
ஏ.டி.எம். மையங்களில் அதன் குறைகளை தெரிவிக்க படிவங்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் குறைகளை கையாளும் அதிகாரிகளின் பெயரும் தொலைபேசி எண்களும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என்று பி.டி.ஐ. (PTI) தெரிவித்துள்ளது.
"இது குறைகளை தெரியப்படுத்த ஏற்படும் தாமதத்தை குறைக்க உதவும்", என்று கூறியுள்ளது.
வாடிக்கையாளர்கள் குறைகளை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களை (Toll-Free) அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் வங்கிகளின் இணையதளத்திலும் தெரிவிக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கிறது என்றும் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.