Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
ஏப்ரல்- ஜூன் காலாண்டு காலகட்டத்தில், அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம், விற்பனையைப் பெருக்க எடுக்கப்பட்ட தீவிரமான உத்திகள் மற்றும் செலவைக்குறைக்க எடுத்த உத்திகளின் விளைவாக ரூபாய் 460 கோடி உபரி பணத்தை சம்பாதித்துள்ளது என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா நிறுவனம் நட்டத்தை குறைத்து இலாபத்தை அதிகரிக்க செயல்படுத்திய திட்டத்தின் (TAP) விளைவாக அக்டோபர்-டிசம்பர் 2011 காலாண்டில் ரூ 512 கோடியாக இருந்த அதன் நட்டம் படிப்படியாக குறைந்து, ஜனவரி - மார்ச் 2012 காலாண்டில் ரூ 432 கோடியாகவும், ஏப்ரல் - ஜூன் 2012 காலாண்டில் வெறும் ரூ 37 கோடியாகவும் குறைந்தது.
கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இருந்து ஏர் இந்தியா, நட்டத்தில் இருந்து உபரி பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்தது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டின் போது ரூ 312 கோடியாகவும், ஜனவரி - மார்ச் மாதம் ரூ 361 கோடியாகவும் அதிகரித்த உபரி பணம், இந்த காலாண்டில் ரூ 460 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary