இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபைகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சின்ஹா "நாங்கள் விண்ணப்பங்களை மீளாய்வு செய்யத் துவங்கியுள்ளோம். பணிச்சுமை மிகவும் அதிகமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் உள்ளக மீளாய்வு முடிந்தவுடன், வெளி மீளாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்று சின்ஹா கூறினார்.
"வங்கி உரிமம் கோரும் விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அனைத்து விண்ணப்பதாரர்களும் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கலாம்" என்று சின்ஹா கூறினார்.
500 கோடி நிகர மதிப்பு, உரிமம் கோரும் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமை, நிதிசார் துறைகளில் செயல்படாமை உட்பட எந்த விதிமுறைகளிளும் எந்தத் தளர்வும் விண்ணப்பதாரர்களுக்கு இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.