200 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை (NCDs) விற்க ஸ்ரீ உள்கட்டமைப்பு ஃபைனான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் அது 26 ஆகஸ்ட் 2013 முதல் செப்டம்பர் 17, 2013 வரை மட்டுமே இந்த பத்திரங்கள் விற்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இத்தகைய கடன் பத்திரங்களுக்கு இந்நிறுவனம் 3 முதல் 5 ஆண்டு காலத்தில் 11.75 சதவீத வட்டியை அளிக்கிறது,
மற்றும் ஒரு கவர்ச்சிகரமான திட்டமாக 6 வருடம் 3 மாதத்தில் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாகும் திட்டதையும் அறிவித்தது.
அதிகமான வட்டி விகிதம்
வங்கி வைப்பு நிதிகளை ஒப்பிடும் போது கடன் பத்திரங்களுக்கு அதிகமான வட்டி கிடைப்பது உண்மை தான். ஆனாலும் வங்கியின் வைப்பு நிதிகள் மிகவும் பாதுகாப்பானவை, கடன்பத்திரங்கள் சற்று அபாயகரமானவை. மேலும் இப்பொழுது வங்கி வைப்பு நிதிகளுக்கும் 9 முதல் 10 சதவீதம் வட்டிக் கிடைக்கிறது. எனவே முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக செயல்படவும்.
பாதுகாப்பான நிறுவனம்
ஸ்ரீ உள்கட்டமைப்பு ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு பிடபிள்யூஆர் குழு ஏஏ சான்றிதழும், கேர் நிறுவனம் ஏஏ- சான்றிதழும் வழங்கி உள்ளதால் இந்நிறுவனம் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
நோ டிடிஎஸ்!!
மேலும் ஒரு சிறப்பு அம்சமாக கடன் பத்திரங்களை டிமெட் முறையில் வைத்து இருந்தால் வைப்பு நிதிகளை போலவே, இதற்கும் டிடிஎஸ் கிடையாது.
ஆலோசனை
பொதுவாக பார்க்கும் பொழுது கடன் பத்திரங்கள் மிகவும் கவர்ச்சிகரமாகவே தெரிகிறது. ஆனால் இதில் சில அபத்துக்கழும் அடங்கி உள்ளது. எனவே முதலீடு செய்யும் முன் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று குட் ரிட்டன்ஸ் இனையத்தளம் தெரிவித்துகொள்கிறது.