மேலும் இவ்வறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி முன்னுரிமை துறைக்கான கடன் இலக்குகளை தவறவிட்ட வங்கிகளின் பெயரை வெளியிடவில்லை.
விவசாயம், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் (MSEs), கல்வி மற்றும் வீடு ஆகிய துறைகள் முன்னுரிமை கடன் திட்டத்தின் கீழ் உள்ளன. இத்திட்டத்தின் படி உள்நாட்டு வங்கிகள் 40 சதவிகிதமும், வெளிநாட்டு வங்கிகள் 32 சதவிகிதமும் முன்னுரிமை துறை பிரிவில் கீழ் உள்ளவர்களுக்கு கடன் தர வேண்டும்.
2013 மார்ச் நிலவரப்படி, பொது துறை வங்கிகள் முன்னுரிமைத் துறைக்கு அளித்த கடன்கள் 36.6 சதவிதம் (12.82 லட்சம் கோடி), தனியார் துறை வங்கிகள் அளித்த கடன்கள் 37.5 சதவிதம் (3.27 லட்சம் கோடி) மற்றும் வெளிநாட்டு வங்கிகள் அளித்த கடன்கள் 35.1 சதவீதம் (84,854 கோடி) என்ற அளவில் இருந்ததாக ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின் படி தெரியவந்துள்ளது.
எனினும், 2012-13 ஆண்டின் போது, வேளாண்மை துறைக்கு வழங்கப்பட்ட கடன்தொகை 6.07 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட 5.75 லட்சம் கோடியைவிட அதிகமாகும். இந்த தொகை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 105.6 சதவீதமாகும். 2012-13 ஆண்டில் சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை 29.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. முன்னுரிமைத் துறைக்கு கடன் வழங்கும் இலக்கை தவற விட்ட வங்கிகளின் நிதி அனைத்தும், கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு (RIDF) ஒதுக்கப்படுகிறது.