சென்னை: அடிப்படைவசதி மேம்பட்டிற்காக, பன்னாட்டு முகவர்களிடமிருந்து கூடுதல் முதலீடுகளை பாதுகாக்கும் நோக்கில், 4.3 பில்லியன் டாலர்களை உலக வங்கி கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய இந்தியா ஆலோசித்துள்ளது என பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் கடன் வழங்கும் கிளையான சர்வதேச வங்கியின் மூலம் வழங்கப்படும் மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி (IBRD), கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி அனுமதிக்க இன்று அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படும் என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் "ஐபிஆர்டி கடன்பத்திரங்களில் ஆர்பிஐ விரைவில் சப்ஸ்கிரைப் செய்யும். இந்த முதலீட்டுத் தீர்மானம் மூலம் அதிக இலாபம் ஈட்ட முடியும்." என கூறினார். உலக வங்கியிலிருந்து இந்தியா கடன்பெறக்கூடிய அளவு, வரையறையை எட்டுவதால், இவ்வாறான கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதலாக கடன் பெறக்கூடிய வாய்ப்பை அதிகரிக்க முடியும் எனவும் இந்த அதிகாரி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications