"பேசிக் சேவிங்ஸ் பாங்க் டெபாசிட் அக்கவுன்ட் (பிஎஸ்பிடிஏ) வழிகாட்டுதல்கள், இந்தியாவில் கிளைகளைக் கொண்டுள்ள அயல்நாட்டு வங்கிகள் உள்பட அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும் பொருந்தும்." இதனால் இந்தியாவில் உள்ள ஏழை மக்களும் ஜீரோ பாலன்ஸ் அக்கவுன்ட்களை துவங்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிஎஸ்பிடிஏ திட்டத்தின் கீழ், சமூகத்தின் ஏழை வர்க்கம் அல்லது நலிந்த வர்க்கத்தைச் சேர்ந்த தனிநபர் எவரும், எந்தவொரு வங்கியிலும் ஜீரோ பாலன்ஸ் அக்கவுன்ட் ஒன்றை துவங்கலாம் என்று மீடியா தகவல்கள் கூறுகின்றன.
இத்தகைய அக்கவுன்ட்களை துவக்குவதற்கு ஆரம்பகட்ட டெபாசிட் எதுவும் தேவையில்லை என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
"பிஎஸ்பிடிஏ அக்கவுன்ட்டை துவக்குவதற்கு தனிநபரின் வயது மற்றும் வருவாய் அளவுகோல்கள் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளோம்." என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
ஆனால் அதற்காக, ‘பேசிக் சேவிங்ஸ் பாங்க் டெபாசிட் அக்கவுன்ட்' வைத்திருப்போர் அதே வங்கியில் மற்றொரு சேவிங்ஸ் அக்கவுன்ட்டை துவக்கக்கூடிய உரிமையைப் பெறலாம் என்று அர்த்தமாகாது என்றும் பிடிஐ தகவலறிக்கை தெரிவிக்கிறது.