பரிமாற்ற விலை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் பல்வேறு கிளைகளின் வெவ்வேறு பிரிவுகள் இடையே நடைபெறும் பரிமாற்றங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் நடைமுறையே ஆகும். இந்த நடைமுறை பன்னாட்டு நிறுவனங்களின் வரிச்சுமையை குறைக்க உதவும்.
கடந்த சில ஆண்டுகளில் வரிச் செலுத்துவது தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்தியா தனது வருமானத்தை அதிகரித்து அதன் மூலம் நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் புதிய விதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் வரிக்கட்டுப்பாடுகளை தெளிவுபடுத்தும் என வருவாய்த்துறை செயலாளர் சுமித் போஸ் கூறினார்.
"புதிய விதிகள் 2013/14 ஆண்டில் தொடங்கி மொத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு பொருந்தும்" என போஸ் தெரிவித்தார்.