"சிறப்பான பருவநிலைகள் மற்றும் கரிஃப் பயிரின் வருகை ஆகியவற்றினால், உணவு விலையேற்றத்தின் மீதான அழுத்தம், வரும் மாதங்களில் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்." என்று அஸ்ஸோசாமின் தலைவர் ரானா கபூர் கூறியுள்ளார்.
இது போக, உணவுப்பொருட்களின் விலைகளின் உயர்வினால் உந்தப்பட்ட ஆகஸ்ட் மாத மொத்த விற்பனை விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, விநியோக தொடர்புச்சங்கிலிகள், பண்டசாலையில் சேமித்தல் மற்றும் இதனோடு தொடர்புடைய உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வண்ணம் விவசாயத் துறையில் முதலீடுகளைப் பெருக்கக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கபூர் தெரிவித்துள்ளதாக, பிடிஐ தகவலறிக்கை உரைத்துகிறது.
மேலும், விநியோக சங்கிலித் தொடர்களில் இருக்கக்கூடிய முதலீடுகளை தோட்ட வேளாண்மை உற்பத்தியோடு இணைக்கவும், விவசாயத் துறை பருவநிலைகளை மட்டும் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவற்றைச் மேம்படுத்துவதும் மிக அவசியமாகும் என்று அஸ்ஸோசாம் கூறியுள்ளது.
"உணவுப்பொருட்களின் மீதான விலையேற்றம், ஏழைகளின் மீது கொடுமையான வரியாக இருப்பதினால், இப்பிரிவில் துறையில் விலையேற்றத்தைக் குறைக்க அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வரும் தற்போதைய சூழலில், விவசாயத் துறை முதலீடின் மூலம், அவசியமான பொருட்கள் நுகர்வோர்க்கு நியாயமான விலைகளில் போதுமான அளவுக்கு விநியோகிக்கப்படக்கூடிய நிலை உருவாவாக்கும்." என்று கபூர் தெரிவித்துள்ளார்.