சென்னை: அண்மையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்ட தனது புதிய ‘கிராண்ட்' ஹச்பாக் மாடல் காருக்கு, அறிமுகமாகி 20 நாட்களுக்குள், 10,000க்கும் அதிகமான முன்பதிவுகள் வந்துள்ளதாக மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் (HMIL) இன்று தெரிவித்தது.
"20 நாட்களுக்குள், சுமார் 10,000திற்கும் மேல் புக்கிங் செய்யப்பட்டிருப்பது ‘கிராண்ட்' மாடல், வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருப்பதை உறுதிசெய்கிறது" என இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ‘கிராண்ட்' அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வெற்றிக்கான சாத்தியகூறு 55 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்தது. நாட்டின் அனைத்து பகுதி முகவர்களிடமுருந்தும், ஏராளமான விசாரணைகள் மற்றும் டெஸ்ட் ட்ரைவ் வேண்டுகோள்கள் வந்தவண்ணம் இருப்பதாவும் இது மேலும் தெரிவித்துள்ளது.
புக்கிங் ஆடர் பற்றி குறிப்பிடுகையில் "இந்த காலாண்டின் சவாலான சந்தை சூழ்நிலையில், வாடிகையாளர்கள் மத்தியில், அதிகளவு ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ‘கிராண்ட்' உருவாக்கும் என நம்புவதாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த துணைத் தலைவர். ராக்கேஸ் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
துவக்க விலை ரூ.4.29 லட்சம் (எக்ஸ்-ஷொரூம், டெல்லி) என்ற விலையில் ‘கிராண்ட்' செப்டம்பர் 4ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.