கடந்த ஜூன் 30 2013 அன்று வெளிவந்த இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இன்போசிஸ் நிறுவனத்தின் வருமான வரி நீங்கி, முதல் காலாண்டு லாபம் 2,374 கோடி ரூபாய். ஆனால், எதிர்பார்த்ததோ 2,300 கோடி ரூபாய் தான்.
இது மட்டும் அல்ல. நிறவனத்தின் டாலர் வருமான வழிகாட்டலான 7-10 சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதை விட குறைந்த மதிப்பிற்கு நிறுவனம் கீழிறங்கும் என்றும் ஆய்வாளர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் நிறுவனத்தின் 2014 ஆம் வருடத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வெளிவந்த அன்று நிறுவன பங்குகள் உயந்தது குறிப்பிடதக்கது.
இரண்டாம் காலாண்டு முடிவுகள்
அக்டோபர் 11, 2014 அன்று வெளிவர இருக்கும் நிறுவனத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் தர வாய்ப்புகள் குறைவு. அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டு வந்தால், பங்குகள் 30% வரை உயர வாய்ப்பு இருக்கிறது. மேலும் நாராயண மூர்த்தியின் திரும்பியதால், இன்போசிஸ் நிறுவனத்தில் மேஜிக் நிகழும் என எதிர்ப்பார்க்கலாம்.
ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி பங்குகளை உயர்த்தி உள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தைகளின் ஈட்டும் அதிகரித்துள்ளது. வேறு ஏமாற்றங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், பங்குச்சந்தை ஈட்டு அதிரடியாக குறையும்.
ஊதிய உயர்வு
அண்மையில் நிகழ்ந்த சம்பள உயர்வால், நெருக்கடி ஆகுமா என முதலீட்டாரர்கள் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். மேலும் நறுவனத்தின் டாலர் வருமான வழிகாட்டலையும் கண்காணிக்க வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பா மீண்டு வரும் அறிகுறிகள் காணப்படுவதால், மேலாண்மை விளக்கவுரை முக்கியமாகிறது.
ஏமாற்றம்...
ஒட்டுமொத்தமாக, முதலீட்டாரர்கள் எதிர்ப்பார்ப்பது நல்ல லாபம் மற்றும் சாதகமான மேலாண்மை விளக்கவுரை தான். ஒரு சிறு ஏமாற்றம் நிகழ்ந்தால் கூட, அது இன்போசிஸ் மட்டும் அல்லாது ஹெச்.சி.எல், டி.சி.எஸ். பங்குகளையும் பாதிக்கும்.
மோகம் நிரைந்த ஐ.டி. துறை..
எப்பொழுதுமே, ஐ.டி. துறையின் பங்குகளிடையே மோகம் அதிகம். அதிலும், அண்மையில் ஹெச்.சி.எல் மற்றும் டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிரடியாக கூடியுள்ளது. இப்போது ஐ.டி. நிறுவனங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.