ஆகஸ்ட் மாதத்தின் போது நிகழ்ந்த இந்த அபரிமிதமான நிதி உள்ளீட்டின் காரணம், இரண்டு மாதங்களுக்கு முன்பு சுமார் 50,067 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டது, அதனை தொடர்ந்து அடுத்த மாதங்களில் முதலிட்டின் வெளிப்பாய்வுகள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை சென்றுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இடையே சந்தையின் மீது நம்பிக்கை அதிகரித்ததை தொடர்ந்து முதலீடு செய்ய துவங்கினர்.
சந்தை ரெகுலேட்டரான செபி வசம் உள்ள சமீபத்திய தகவல்களின் படி, முதலீட்டாளர்கள் சுமார் 23,713 கோடி ரூபாய் வரையிலான நிகர தொகையை ஆகஸ்ட் மாதத்தின் போது பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் (எம்எஃப்) திட்டங்களில் உட்புகுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இது, நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) முதலீட்டாளர்களிடம் இருந்து இதுவரையில் மியூச்சுவல் ஃபண்ட் பெற்றிருக்கக்கூடிய நிகர நிதியின் புழக்கத்தை சுமார் 69,252 கோடி ரூபாய் வரை கொண்டு சென்றுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் என்பது பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள், பணச்சந்தைத் திட்டங்கள் மற்றும் இதனையொத்த ஏனைய திட்டங்களில் முதலீடு செய்யும் பொருட்டு, ஏராளமான முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட பணத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு முதலீட்டுத் திட்டமாகும்.
மொத்தமாக மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 8.05 லட்சம் கோடி ரூபாய் வரையிலான புழக்கத்தை சாத்தியமாக்கியிருந்தாலும், சுமார் 7.81 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மீட்பையும் கண்ணுற்றதனால் சுமார் 23,713 கோடி ரூபாய் வரையிலான மொத்த வெளிப்பாய்வையும் இது ஏற்படுத்தியுள்ளது. 2013 ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்த நிதிப் புழக்கமானது, மொத்த மியூச்சுவல் ஃபண்ட்களை அதற்கு முந்தைய மாதத்தில் இருந்த சுமார் 7.6 லட்சம் கோடி ரூபாயிலிருந்து சுமார் 7.66 லட்சம் கோடி ரூபாய் வரை வளரச் செய்துள்ளது.