இன்போசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து ஐடி துறையின் மற்றொரு ஜம்பவானான டிசிஎஸ் நிறுவனம், தனது 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட உள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் பங்கு விலை வரலாறு காணாத உயர்வை அடைந்ததுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 2,233.50 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
டாடா குழுமத்தின், ஜூலை - செப்டம்பர் காலாண்டின் வருவாய் அதன் போட்டி நிறுவனங்களை விட நன்றாகவே இருக்கிறது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
18% சதவீதம் உயர்வு..
ஒருமித்த அடிப்படையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 18% சதவீதம் அதிகரித்தும், டாலர் வருவாய் விகிதத்தில் 5.4 சதவிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்நிறுவனத்திற்கு சில தரகு நிறுவனங்கள் "வாங்குதல்" (Buy) என்ற தகுதியும், சில நிறுவனங்கள் "வைத்தல்" (Hold) என்ற தகுதியும் வழங்கி இருக்கிறது.
2ஆம் காலண்டு முடிவுகள்!!
"டிசிஎஸ் நிறுவனத்தின் 2ஆம் காலண்டு முடிவுகள் பங்கு சந்தையிலும் சரி, நிறுவனத்திற்கும் சரி, ஒரு உயர்ந்த நிலையை அடைய செய்யும்" என அசின்டியஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைவர், அலோக் ஷிண்டே தெரிவித்தார்.
ஐடி நிறுவனங்கள்
டிசிஎஸ் நிறுவனத்தை தவிர, திங்கள் கிழமை முடிவில் இன்போசிஸ் 1.5% உயர்வும், விப்ரோ 2.58% உயர்வும், டெக் மஹிந்திரா 0.57% உயர்வு அடைந்தது குறிப்பிடதக்கது.
ஐடி மற்றும் பார்மா துறை
"ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் தான் இன்றளவில் முக்கிய பங்குகளாக திகழ்கிறது" என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பொய்யாக்கமல் டிசிஎஸ் நிறுவனம் அவர்கள் வயிற்றில் பால் வார்த்தது.