டெல்லி: பங்கு சந்தையில் பெரும் முதலீட்டாளரான எல்ஐசி நிறுவனம், இன்போசிஸ் நிறுவனத்தின் 1.77 சதவித பங்குகளை ஜூலை - செப்டம்பர் காலாண்டில் விற்றுள்ளத, இதன் மதிப்பு சுமார் 3,400 கோடி.
எல்ஜசி நிறுவனம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் 6.72 சதவித பங்குகளை தன்னிடம் வைத்திருந்தது, ஆனால் செப்டம்பர் மாத முடிவில் இதன் அளவு 4.95 சதவிதமாக குறைந்தது. அதைபோல் ஜனவரி - மார்ச் காலாண்டில் இதன் விதம் 5.96 சதவிதமாக இருந்தது.
கடந்த 10 மாத காலத்தில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் விலை 2,300 ரூபாய் என்ற நிலையில் இருந்து 3,300 ரூபாய் வரை உயர்ந்தது. தற்போது இந்நிறுவனத்தின் பங்கு விலை 3,300 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனம் தனது 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து அதன் 52 வார உயர் விலையை அடைந்தது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி வருகையை தொடர்ந்து இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் அதிகரித்தது. இதற்கு முன்பு இந்நிறுவனம் சில சரிவுகளை சந்தித்தது குறிப்பிடதக்கது.
எல்ஐசி விற்ற பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (FII) வாங்கியது, இதனால் இந்நிறுவனத்தின் பங்கு பற்றில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் 39.55 சதவிதத்தில் இருந்து 39.93 சதவிதமாக அதிகரித்தது.
இதனால் இன்போசிஸ் பங்குகளின் விலை ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 1.6 சதவீதம் அதிகரித்து, மேலும் இந்நிறுவனத்தின் விற்பனை விகிதம் 9 -10 சதவிதம் அதிகரித்தது என இன்போசிஸ் தெரிவித்தது.