டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான டிஎல்எஃப், 1,337 கோடி மதிப்புள்ள குர்கானில் அமையவுள்ள அதன் ஆடம்பர குடியிருப்பு திட்டத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை எல் & டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
டிஎல்எஃப் நிறுவனம் 765 குடியிருப்புகளை உள்ளடக்கிய உயர்ரக வீடுகளை கட்டும் திட்டத்தை "சிகரம்" (The Crest) என்ற பெயரில் குர்கானில் ஏற்கனவே கட்டத் தொடங்கி, அதில் 250 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.
"டிஎல்எஃப் நிறுவனத்தின் ஆடம்பர குடியிருப்பு திட்டத்தை நடத்திமுடிக்க கட்டுமானத்துறையின் பெரும்நிறுவனமான எல் & டி நிறுவனத்தை நியமித்துள்ளது" என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இத்திட்டத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பீடு சுமார் ரூ.1,337 கோடி என மதிப்பிடப்படுகிறது. புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச கட்டுமான நிறுவனங்களினால் அதன் புதிய திட்டங்களை நிறைவேற்றப்படும் என்ற கொள்கைக்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறியது.

டிஎல்எஃப் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அதன் கட்டுமானத் திட்டங்களை விரைந்து முடிக்கும் வண்ணம் வெளி நிறுவனங்களுக்கு கட்டுமான வேலைகளை அயலாக்க ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ளது.
கட்டுமானம், உள்கட்டமைப்பு, வடிவமைப்பு, நிறைவுப்பணிகள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், குழாய்கள், வெளிச் சேவைகள், இயற்காட்சியமைப்பு, மற்றும் கேடய சின்னத்துடன் தொடர்புடைய அனைத்து துணை பணிகளும் இந்த கட்டுமான ஒப்பந்தத்தில் அடங்கும் .
டிஎல்எஃப் 2012-13 நிதி ஆண்டில் சுமார் ரூ.711.92 கோடி நிகர லாபம் சம்பாதித்துள்ளது. மேலும் அதன் மொத்த வருமானம் 7,772.84 கோடி. முன்னதாக, டிஎல்எஃப் நிறுவனம் திட்ட மேலாண்மை ஆலோசகராக MACE குழுவை நியமனம் செய்தது.
MACE நிறுவனம் கட்டுமான சேவை மற்றும் ஆலோசனை உட்பட ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் உலகளாவிய நிறுவனமாகும். லண்டன் கண் (London Eye), ஹீத்ரோ டி5 விமான முனையம், 2012 லண்டன் ஒலிம்பிக் போன்ற புகழ்பெற்ற திட்டங்களில் MACE நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
"The Crest டிஎல்எஃப் குழுமத்தின் அடுத்த தலைமுறையின் ஆடம்பர குடியிருப்பு திட்டத்தின் சின்னமாக விளங்குக உள்ளது, எனவே இந்த திட்டத்தின் கட்டுமான வடிவமைப்புகள், கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் திட்ட மேலாண்மை நடைமுறைகள், மிக உயர்ந்த சர்வதேச தரத்திற்கு படி இணையாக உள்ளன " என டிஎல்எஃப் நிறுவனத்தின் திட்ட தலைவர் ரவி கச்ரு கூறினார்.
திட்ட தளத்தில், தொழிலாளர் மையம், விபத்துச் சேவையூர்தி, மருத்துவர் வசதி, குடிநீர் மற்றும் ஒட்டுமொத்த இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் போன்றவை நிறுவனத்தால் வழங்கப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications