டாடா-சிங்கபூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்நிய முதலீடு பெற நிதி அமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: சிங்கபூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் நம் நாட்டில் முழுநேர விமான சேவை அமைப்பதற்கு, வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது என மூத்த நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழன்று FIPB உடனான கூட்டத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொருளாதார அலுவல்கள் செயலாளர் அர்விந்த் மாயராம் ஒப்புதல் அளிக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும் அவர் இது குறித்து எந்த விவரங்களும் அளிக்கவில்லை.

சிங்கபூர் ஏர்லைன்ஸ் இந்த இணைவினை நிறுவனத்தின் 49% பங்கிற்கான 49 மில்லியன் டாலர்களை தொடக்க முதலீடாக வழங்க உள்ளது. மீதமுள்ள பங்கிற்கு டாட்டா குழுமம் 51 மில்லியன் டாலரை தொடக்க முதலீடாக வழங்க உள்ளது என இந்நிறுவனங்கள் கூறியுள்ளன.

டாடா-சிங்கபூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்நிய முதலீடு பெற நிதி அமைச்சகம் ஒப்புதல்

இந்த கூட்டு ஏர்லைன் நிறுவனம் அதன் நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன்பு பெருமளவிலான ஒழுங்குமுறை ஒப்புதல்களை பெற வேண்டியுள்ளது.

மாயராம் அவர்கள் மேலும், சிங்டெலின் ஒரு பிரிவிற்கு வெளிநாட்டு நேரடி முதலீடு திட்டத்தை (FIPB) அங்கீகரித்துள்ளது எனக் கூறினார். இருப்பினும் அதனை விரிவுபடுத்தவில்லை.

மத்திய அரசு தொலை தொடர்பு நிறுவனங்களின் வெளிநாட்டு வைப்பு தொகையில் 74% நீக்கி 100 சதவீதத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் இந்த சிங்டெல் பிரிவு உள்ளூர் சிறுபான்மை பங்காளிகள் பங்குகளை வாங்க உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொலைதூர தொலைபேசி வணிகத்தில் தனது பங்கை 100% ஆக உயர்த்த இருக்கின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+