வாஷிங்டன்: பொருளதார நிலையற்ற தன்மையின் காரணமாக இந்தியா, அமெரிக்காவில் தனது முதலீட்டை 57 பில்லியன் டாலராக அளவு குறைத்துள்ளது. மேலும் கடந்த நான்கு மாதத்தில் இதுவே குறைந்த அளவாகும்.
டாலர் விலை ஏற்றத்தை தொடர்ந்து இந்திய அமெரிக்க மீதான முதலீட்டை குறைத்து கொண்டு வந்தது. இதனால் மே மாதம் 59.9 பில்லியன் டாலராக இருந்த முதலீடு ஜூலை மாதத்தில் 58.9 பில்லியன் டாலராக குறைத்து கொண்டது, மேலும் இந்த மாதம் 1.9 பில்லியன் டாலர் குறைத்து 57 பில்லியன் டாலர் அளவு குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் 55.8 பில்லியன் டாலராக இருந்த முதலீடு, மே மற்றும் ஜூன் மாதத்தில் 59.9 பில்லியன் டாலராகவும் 61.2 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது.
அமெரிக்க பங்குகளில் அதிகமாக முதலீடு செய்திருப்பது சீனாவே. சீனா ஜூலை மாத இறுதியில் 1.279 ட்ரில்லியன் டாலர் முதலீட்டு மதிப்பிலான பங்குகள், ஆகஸ்ட் மாதத்தில் 1.268 ட்ரில்லியன் டாலர் அளவு குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. சீனாவிற்கு பிறகு ஜப்பான் தான் அதிகமான அமெரிக்க பங்குகளை வைத்திருக்கிறது. அவர்கள் கிட்டத்தட்ட 1.149 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கின்றனர்.
BRICS நாடுகளுக்கு மத்தியில் (பிரேசில், ரஷ்யா, இந்திய, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிக்கா) அமெரிக்க பங்குகளை குறைவாக வைத்திருக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்தியா. ஜப்பானுக்கு அடுத்த படியாக பிரேசில் 252.9 பில்லியன் டாலர் அமெரிக்க பங்குகளை ஆகஸ்ட் மாதம் வைத்திருந்தது. அதற்கு அடுத்து ரஷ்யா 136 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பங்குகளை வைத்திருக்கிறது.
ஆகஸ்ட் மாத கணக்கின் படி, இதில் தெற்கு ஆப்ரிக்கா தான் மிகவும் குறைவாக, வெறும் 13.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளது. இது இந்தியா வைத்திருப்பதை விட பல மடங்கு குறைவாகும்.
அமெரிக்க அரசாங்கத்தின் இடைகால முடக்கம், கடன் தொல்லைகளால் நிறுவனங்கள் மூடல் ஆகிய பிரச்சனைகளால் தடுமாறி கொண்டிருந்த அமெரிக்க பொருளாதாரம் கடும் போராட்டத்தின் முடிவில் ஒபாம தலைமையிலான அரசு சென்ற மாதம் சீர் செய்தது நினைவிருக்கலாம்.