இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி அதனை 7.75% ஆக உயர்த்தி உள்ளது, மேலும் குறுகிய-கால நிதிக்கான விகிதத்தை 8.75% ஆக குறைத்த பின்னர், இத்தகைய நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி எடுத்துள்ளது.
180 முதல் 210 நாட்கள் முதிரவு காலம் கொண்ட, 1 கோடிக்கும் குறைவான குறுகிய கால வைப்புநிதிகளுக்கு, எஸ்பிஐ இப்பொழுது 7% வட்டி வழங்குவதாகவும் அல்லது முன்பு வழங்கப் பட்டதை விட 20 அடிப்பைடை புள்ளிகள் அதிகமாக வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த வங்கி 1 கோடிக்கும் அதிகமான வைப்பு நிதிகளின் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து, 2 சதவிதம் வட்டி வழங்குகிறது. 1 கோடிக்கும் அதிகமான வைப்பு நிதிகளை பல்க்கு டெப்பாசிட் என்று அழைக்கப்படும்.
7 முதல் 60 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட நிதிகளுக்கு, அதிகபட்சமாக 2% வட்டி வகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் வட்டி வகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது.
SBI -ல் ஜுன் மாத இறுதியில் இருந்த தொடர் வைப்பு நிதியின் மதிப்பு ரூ.6,53,629 கோடியாக இருந்தது. இதில், சில்லறை தொடர் வைப்பு நிதியின் அளவு ரூ.4,93,977 கோடி ஆகும்.