சென்னை: அனைத்து வங்கிகளும் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. வங்கிகளின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பொதுத்துறை வங்கிகளின் முதல் தொகுதி வருவாய் கனிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக மோசமான சொத்துக்கள் (Bad Asset) பிரிவை சார்ந்த வருவாய், செப்டம்பர் காலாண்டின் போது, சந்தை எதிர்பார்ப்புகளை விட பொது துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளுள், இது வரை பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, அலஹாபாத் வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை தங்களின் காலாண்டு வருவாயை அறிவித்துள்ளன.
பாங்க் ஆஃப் இந்தியா
கடந்த ஆண்டின் போது சுமார் 302 கோடி ரூபாயாக இருந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம், இவ்வருட செப்டம்பர் காலாண்டின் போது சுமார் 105 சதவீதம் வரை உயர்ந்து சுமார் 622 கோடி ரூபாயை எட்டி,
நிகர வட்டி வருமானம் சுமார் 2,527 கோடி ரூபாய் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் போது இருந்த சுமார் 2,196 கோடி ரூபாய் வருமானத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் 15.07 சதவீத அளவு வளர்ச்சியடைந்து இந்நிலையை எட்டியுள்ளது.
அலகாபாத் வங்கி
கொல்கத்தாவைச் சேர்ந்த அலகாபாத் வங்கி சுமார் 275.81 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கொண்டு, கடந்த ஆண்டு இருந்த 234.20 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் சுமார் 17.7 சதவீத உயர்வை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வங்கியின் பங்குகள் 2.3 சதவீதம் என்ற வீதத்தில் சுமார் 93.85 ரூபாயில் முடிவடைந்துள்ளன.
இந்த காலாண்டின் போது இதன் நிகர வட்டி வருவாய் சுமார் 1,309 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1,174 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
சிண்டிகேட் வங்கி
சிண்டிகேட் வங்கியும், சுமார் 1.4 சதவீத மார்ஜினல் உயர்வுடன் கூடிய நிகர லாபமாக சுமார் 470.12 கோடி ரூபாயை அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் போது, சுமார் 463.37 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடா ஊழியர்களுக்கான செலவு மற்றும் கருவூல இழப்புகளுக்கு அதிகமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதனால், அதன் நிகர லாபம் கடந்த ஆண்டு இருந்த 1,301.39 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் சுமார் 10.2 சதவீதம் வரை சரிந்து 1,168.1 கோடி ரூபாயாக இறங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இருந்தாலும் இதுவும் சந்தை எதிர்பார்ப்பைக் காட்டிலும் உயர்வானதாகவே இருந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications