மும்பை: எண்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ரேடியோ மிர்ச்சி எஃப்எம் நிறுவனம், நேற்று அதன் 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற எஃப்எம் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இந்நிறுவனத்தின் 2ஆம் காலாண்டின் மொத்த லாபம் 59.4 சதவிசதம் அதிகரித்துள்ளது. தொழில் ரிதியாக ரேடியோ மிர்ச்சி மற்ற எஃப்எம் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருந்தது, இப்பொழுது வர்த்தக ரிதியாகவும் தனது ஆதிக்கத்தை காண்பித்துள்ளது.
வரிக்கு பின் லாபம்
இந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டில் 2ஆம் காலாண்டின் முடிவில் வரிக்கு பின் லாபமாக பெற்றது ரூ.16.4 கோடியாகும், இதுவே கடந்த நிதியாண்டில் இதன் வரிக்கு பிந்தய லாபம் ரூ.10.3 கோடி மட்டுமே.
மொத்த வருவாய்
ரேடியோ மிர்ச்சி நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் மொத்த வருவாய் 86.5 கோடியாகும். இது கடந்த வருடத்தை விட 12.3 சதவிதம் அதிகமாகும்.
வரிக்கு முன் லாபம்
2ஆம் காலாண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் வரிக்கு முன் லாபம் ரூ.25.3 கோடியாகும். கடந்த ஆண்டை விட இந்த வருடம் 33.6 சதவிதம் உயர்ந்தது.
12% வளர்ச்சி!!
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில் " நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டு பகுதியில் நிறுவனம் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது. பெரிய நிறுவனங்களின் உடனான ஒப்பிந்தத்தின் மூலம் இது சாத்தியமானது. இந்நிறுவனம் கடந்த ஆண்டை விட 10-12% வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் ரேடியோ மிர்ச்சி நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிகபடியான லாபம் ஈட்டியுள்ளது" என தெரிவித்தார்.