மும்பை: இந்திய விமானப்படை தன் விமான உபகரணங்களை தானியங்கி மயமாக்கவும் மின்னணு கண்காணித்தல் பணிகளுக்காகவும் 900 கோடி ருபாய் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை மென்பொருள் சேவை நிறுவனமான விப்ரோவிற்கு வழங்கியுள்ளதாக விமானப்படை பராமரிப்பு பணி அதிகாரி திரு.ப.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து விமான பராமரிப்பு பணிகளும் மின்னணு பதிவுகளாக பெறப்படும். தற்போது பயன்படுத்தப்படும் புத்தகப்பதிவேடுகளுக்கு பதிலாக இந்த மின்னணு பதிவேடுகள் பயன்படும். இது ஒரு காகித பயன்பாட்டை முழுவதுமாக குறைக்கும் முயற்சி என திரு கனகராஜ் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பல்லாண்டு மின்னணு பராமரிப்பு மேலாண்மை முறை போர் போன்ற சூழ்நிலைகளில் விமானப்படையை உடனடியாக ஆயத்தமாக்க உதவும் என தெரிவித்தார்.
தொழில்நுட்ப மேம்பாடு
இந்த திட்டத்தின் மூலமாக துறை வாரியான மின்னணு பராமரிப்பு மேலாண்மை முறையை இணையதள அடிப்படையில் இயங்கவைக்க விமானப்படை எண்ணியுள்ளது. இதன்மூலம் கட்டமைப்பு மேலாண்மை, விமான உபகரண திட்டமிடல் மற்றும் மேலாண்மை, பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இயலும்.
இரண்டு தளம்
இந்த திட்டத்திற்காக இரு இடங்களை தேர்வு செய்துள்ளதாகவும், அதில் ஒன்று விபத்து மேலாண்மை மையமாக செயல்படும் என்றும் திரு கனகராஜ் தெரிவித்தார்.
உலக தரத்திற்கு ஈடு
இந்த திட்டம் துல்லியமான மற்றும் வேகமான தகவல்கள் பறிமாற்றம் ற்றும் குறைந்த மனித சக்தியால் மேம்படுத்தப்படும். மேலும் இத்திட்டத்தின் மூலம் விமானப்படைக்கான மொத்த செலவினை குறைக்கும் என அவர் தெரிவித்தார்.
போட்டி நிறுவனம்
இந்த ஒப்பந்தத்தை பெற டாட்டா கன்சல்டன்சி, அதன் துணை நிறுவனமான சிஎம்சி மற்றும் சில நிறுவனங்கள் போட்டியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
170 விமான தளம்
இத்திட்ட விண்ணப்ப கோருகை விவரங்கள்படி முதற்கட்டமாக, இந்த புதிய திட்டம் விமானப்படையின் 550 விமானங்களை உள்ளடக்கிய அனைத்து 170 விமான தளங்களில் சிறிது சிறிதாக நடைமுறை படுத்தும் முன்னர், சில முக்கிய இடங்களில் மட்டும் நடைமுறை படுத்தப்படும் என தெரிகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications