மும்பை: இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் (ஒஎன்ஜிசி) இரண்டாம் காலாண்டு நிகர லாபங்கள் எதிர்பார்த்த அளவான 2.8 விழுக்காட்டை விட அதிகமாகி வருட ஒப்பீட்டில் ருபாய் ரூ.6,084 கோடி என்ற அளவை எட்டியதை தொடர்ந்து அந்நிறுவன பங்குகள் 2 சதவிதம் உயர்ந்து ரூ.270 க்கு விற்கப்படுகிறது.
அந்நிறுவனத்தின் நடப்பு ஆண்டின் விற்பனை 12.8 சதவிதம் உயர்ந்து ரூபாய் 22,832 கோடி என்ற அளவில் உள்ளதாக ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
ஆனால் வல்லுனர்களின் கணிப்புகளின் படி ஆண்டின் மொத்த விற்பனை ரூ.21,897 கோடியும் அதன் லாபம் ரூபாய் 5,881 கோடி என்றளவில் கணிக்கப்பட்டது.
இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மானிய சுமைகளை சரியான அளவில் வகுத்துள்ளது, இவ்வருடத்தின் முதல் காலாண்டில் ரூபாய் 12,622 கோடியும், இரண்டாம் காலாண்டில் அளவான ரூபாய் 12,330 கோடியும், மேலும் 2014 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 13,796 கோடி ருபாய் அளவிற்கு, ஏற்க உள்ளது.
இதன் பங்குகள் மதிப்பு 270 ருபாய் என்று தொடங்கி ருபாய் 275 வரை வர்த்தகம் செய்யப்பட்டது. நேற்று காலை 10 மணி முதல் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் மொத்தமாக சுமார் 7,55,314 பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.