மும்பை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) நடப்பு ஆண்டிற்குள் தன்னுடைய வர்த்தக அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக ரூ.8,000 முதல் ரூ.9,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்கு முதலீட்டை க்யூஐபி (QIP) எனப்படும் தேர்ச்சிபெற்ற அமைப்புசார் அமர்வு முறை திட்டத்தின் மூலாமாக திரட்ட திட்டமிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில், "இந்த நிதி திரட்டும் முயற்சியானது அரசு ஏற்கனவே உட்செலுத்தியுள்ள ரூபாய் 2000 கோடிக்கும் மிகையான ஒன்று எனவும் மார்ச் மாதத்திற்குள் இப்பங்கு முதலீட்டை திரட்ட இலக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வங்கியில் அரசின் பங்கு 62 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் இவ்வங்கி இரண்டாம் நிலை பத்திரங்கள் மூலம் முதலீட்டை திரட்டும் எனவும் பட்டச்சார்யா தெரிவித்தார்.

எஸ்பிஐ-யின் போதுமான முதலீட்டு வீகிதம் (CAR) 11.69 சதவீதமும், முதன்மை தர முதலீட்டில் 8.73 சதவீதமாகவும் பாஸல்-2 விதிமுறைக்குட்பட்டும் உள்ளது.
இதன் பின்னணியில், தன்னுடைய இணை வங்கியை இணைத்துக்கொள்ளும் திட்டங்களை வகுக்கவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. முதலில் உள்சீரமைப்புகளை மேற்கொண்டு ஒரு உறுதியான அடித்தளம் அமைத்த பிறகு இணை வங்கிகளை இணைக்கும் பணிகளை முழு வேகத்துடன் தொடர்வோம் என அதன் தலைவர் தெரிவித்தார்.
அந்த வங்கியின் முன்னாள் தலைவர் பிரதிப் சௌதுரி, ஒரு இணை வங்கியினை இணைக்கத் திட்டமிட்டிருந்தபோதும் அவரின் பணிக்காலம் முடிவடைந்தது, இதனால் அந்த பணிகளை தற்போது அருந்ததி பட்டாச்சார்யா சிறப்புடன் செய்து வருகிறார். இப்போது ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவன்கோர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய ஐந்து இணைவங்கிகள் உள்ளன.
More From GoodReturns

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications