நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவு எப்பொழுது நிறைவேறும்???

டெல்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் கட்டுமானம், வீட்டு வசதியின் விலைவாசி 12 நகரங்களில் சராசரியாக 5.3 சதவிதம் உயர்ந்துள்ளது, இதற்கு நேர்மாறாக 10 நகரங்களில் விலைவாசி குறைந்துள்ளது. நாட்டின் தலைநகரமான டெல்லியில் மட்டும் சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மக்களின் வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவு வெறும் கனவாகவே உள்ளது.

கடந்த வருடம் இதே காலாண்டில் டெல்லியில் வீட்டு வசதியின் விலைவாசி 4.5 சதவீதம் குறைந்திருந்தது குறிப்பிடதக்கது. ஆனால் டெல்லியில் மட்டும் ஒரு ஆண்டிற்கு சராசரியாக வீட்டு வசதியின் விலைவாசி 6.7 சதவீதம் உயர்கிறது என நேஷனல் வீட்டுவசதி வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவு எப்பொழுது நிறைவேறும்???

இந்த விலைவாசி டெல்லியில் ஆண்டிற்கு அதிகபடியாக 6.7 சதவிதம் உயர்ந்துள்ளது, அதற்கு அடுத்தபடியாக கொல்கத்தாவில் 5.3 சதவீதமாக உயர்ந்தது. மனம் ஆருதல் அளிக்கும் வகையில் மீரட் பகுதியில் சுமார் 6.9 சதவீதம் வரை குறைந்துள்ளது,

நடப்பு நிதியாண்டின் ஜூலை- செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் 12 முக்கிய நகரங்களான மும்பையில் 0.5 சதவீதம் முதல் கொல்கத்தாவில் 5.3 சதவீதம் வரை விலைவாசி உயர்ந்துள்ளது, அதேபோல் பெங்களூரில் 0.9 சதவீதம் முதல் மீரடில் 6.9 சதவீதம் வரை குறைந்துள்ளது என நேஷனல் வீட்டுவசதி வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் புனே, கொச்சி, கோயம்புத்தூர் மற்றும் டேராடூன் ஆகிய பகுதிகளில் விலைவாசியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தி.

இந்நிலைமை எப்பொழுது நடுத்தர மக்களுக்கு சாதகமாக மாறும்???

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+