ஆர்பிஐ-யின் பத்திர விற்பனையின் ஏலம் அறிவிக்கப்பட்டது!!!...
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி வரும் நவம்பர் 26ஆம் தேதியன்று ரூ.1,000 கோடி மதிப்புள்ள பணவீக்கம் உள்ளடக்கிய பத்திரங்களை ஏல முறையில் விற்க திட்டமிட்டுள்ளது.
இப்பத்திரங்கள் வருடத்திற்கு 1.44 சதவித வட்டி வகிதத்தில் விற்கப்பட உள்ளது, மேலும் இதன் வட்டி வருமானம் அரையாண்டில் அளிக்க உள்ளது, எனவே டிசம்பர் 5 மற்றும் ஜூன் 5 நாள்களில் ஆர்பிஐ முதலீட்டாளர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக, ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அனுமதிக்கப்பட்ட ரூ.1000 கோடியில் 20 சதவீதம் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு அரசின் ஆணைப்படி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் சுற்று பத்திர விற்பனையாகும், முதல் சுற்று ஜூன் மாதம் நடைப்பெற்றது.
ஏலத்திற்கான விலை பட்டியலை மின்னணு முறையில் நவம்பர் 26ஆம் தேதி அன்று கடைசி நாளாக நிர்னயக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications