மும்பை: இந்தியாவின் முன்னணி டெலிக்காம் நிறுவனமான பார்தி ஏர்டெல் உலகெங்கும் தனது தொலைதொடர்பு சேவையை அளித்துவருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்காவில் தன்னுடைய டெலிகாம் டவர் வணிகத்தை 1.8 பில்லியன் டாலருக்கு விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சிஎன்பிசி-டிவி18 தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்நிறுவனத்தின் 9.69 பில்லியன் டாலர் கடன் தொகையை குறைக்க உதவும் என அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, இந்த நிறுவனம் அதன் ஆப்பிரக்கா டவர் வர்த்தகத்தை இந்திய டவர் பிரிவுக்கு மாற்ற பரிசீலிப்பதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் இத்திட்டம் சில காரணங்களுக்காக தடைப்பட்டது. பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமாக ஆப்பிரிக்காவில் 15,000 டவர்கள் உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹீலியோஸ், ஏடிசி, ஈட்டன் மற்றும் ஐஹெச்எஸ் போன்ற நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தை வாங்க முன்வந்துள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்ததுள்ளது. இதைபற்றி அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அனுகியபோது கருத்துச் சொல்ல அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

கடந்த மாதம் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை அறிவித்த பின்னர், பார்தி குரூப் தலைமை நிதி அதிகாரி சார்வ்ஜித் சிங் தில்லான் கூறுகையில், இந்நிறுவனம் ஆபிரிக்காவில் தன்னுடைய டவர் வணிகத்தை ஒரு தனி நிறுவனமாக இயக்க விரும்பவில்லை, மேலும் அதன் ஆப்பரேட்டிங் அமைப்பை மாற்றி அமைப்பது பற்றி யோசித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
பார்தி நிறுவனத்தின் பெரும்பாலான கடன் 2010ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் ஜெயின் டெலிகாம் நிறுவனத்தின் வர்த்தகத்தை 10.7 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதால் ஏற்ப்பட்டது ஆகும். சமீபத்தில், பார்தி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஒரு பத்திரிக்கை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிறுவனம் அதன் இருப்புநிலை அளவு மற்றும் வலிமைக் மிகுதியாக கொண்டு "மிகவும் வலிமையான நிலையில்" இருப்பதாக அவர் தெரிவித்தார். அதன் தற்போதைய கடன்/ வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் ஆகிய செலவீனங்கள் கழிக்கப்படும் முன் உள்ள வருவாய் (EBITDA) விகிதம் கிட்டத்தட்ட 2.2 சதவீதமாக ஆக உள்ளது 2011ஆம் ஆண்டு வருவாய் விகிதம் 3 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications