அத்தியாவசிய மருந்துகளுக்கு வரி விலக்கு!!! மகிழ்ச்சியில் மக்கள்...

டெல்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் போது விலை மாற்றத்துக்கு உள்ளான அத்தியாவசியமான மருந்துகளை ரீ-பேக்கேஜிங் செய்து அனுப்புவதற்கு அளிக்கப்பட்ட உள்நாட்டு பொருள் வரி விலக்கை மேலும் 30 நாட்கள் வரை அரசு நீட்டித்துள்ளது.

நேஷனல் ஃபார்மாஸூட்டிகல் ப்ரைஸிங் அத்தாரிட்டி (என்பிபிஏ) புதிய மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவை (டிபிஸிஓ) செயல்படுத்திய பின், மே மற்றும் ஜூன் மாதங்களின் போது விலை நிர்ணயம் செய்யப்பட்ட இந்த குறிப்பிட்ட மருந்துகளின் முதல் பாட்சுக்கு மட்டுமே வரி விலக்கு அளிப்பதாக ஜூலை மாதத்தின் போது நிதி அமைச்சகம் அறிவித்தது, இதன் படி, ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த அனைத்து மருந்துகளின் சராசரி விலை, குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வரையிலான சந்தைப் பங்குடன் இருக்கும்படியாக விலை வரையறை நிர்ணயிக்கப்பட்டது.

அத்தியாவசிய மருந்துகளுக்கு வரி விலக்கு!!! மகிழ்ச்சியில் மக்கள்...

சுமார் 348 அத்தியாவசிய மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, இப்புதிய விலை உத்தரவின் படி இணங்குவதற்கு சுமார் 45 நாட்கள் வரையிலான காலக்கெடுவை மத்திய அரசு அளித்தது. ஆனால், இந்நிறுவனங்கள் சந்தையில் உபயோகத்தில் உள்ள அம்மருந்துகளை திரும்பப் பெற்று, அவற்றை ரீ-பேக்கேஜ் மற்றும் ரீ-லேபிள் செய்து திரும்ப அனுப்பி வைக்க வேண்டி இருந்ததினால், விலை நிர்ணயம் செய்யப்பட்ட முதல் தொகுதியில் இருந்த மருந்துகளுக்கு உள்ளூர் பொருள் வரிக்கு விலக்கு அளித்தது அரசு.

"பொதுமக்களுக்கு நலம் பயக்க இந்த நீட்டிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்ற வாதத்தை ஆமோதித்து, ஃபார்மாஸூட்டிகல்ஸ் டிபார்ட்மென்ட் (டிஓபி), என்பிபிஏவினால் வெளியிடப்பட்ட விலை அறிவிப்புகள் தொடர்பாக வரி விலக்கு செல்லுபடியாகக்கூடிய காலக்கெடுவை, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டின் ஒப்புதலோடு, முன் அறிவித்த 45 நாட்கள் கெடு முடிவடைந்த அடுத்து மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது," என்று சமீபத்திய டிஓபி அறிக்கை ஒன்று கூறுகிறது.

மே 15 ஆம் தேதியில் விலைகள் மாற்றம் செய்யப்பட்டு, ரீ-ப்ரிண்டிங், ரீ-லேபிளிங், ரீ-பேக்கிங் அல்லது ஸ்டிக்கரிங் போன்றவற்றுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் உற்பத்தியாளர்களுக்கு, 30 நாட்கள் வரையிலான கூடுதல் காலக்கெடு வழங்கப்படுவதாக, ஜூலை 29 ஆம் தேதியன்று ரெவின்யூ டிபார்ட்மென்ட் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய விலைகளோடு ஒத்துப் போவதற்கு நிறுவனங்கள் கூடுதல் கெடுவை கேட்டு வற்புறுத்திக் கொண்டும், மருந்து உற்பத்தியாளர்கள் சிலர் பல்வேறு உயர்நீதி மன்றங்களை அணுகிக் கொண்டும் இருக்கும் சூழலில், இந்த புதிய நடவடிக்கை மருந்து உற்பத்தியாளர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+