ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் நாட்டின் மென் பொருள் ஏற்றுமதியில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் உயரந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த பங்குகள் 3 சதவீதம் மட்டுமே உயர்ந்தது குறிப்பிடதக்கது. மேலும் ஐடி துறையில் இந்நிறுவனம் 4% வளர்ச்சியை எட்டியது.
மேலும் இந்த வருடத்தின் துவக்கம் முதல் இன்று வரை இந்நிறுவன பங்குகள் 86 சதவீதம் உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மூலம் இந்நிறுவனத்தின் முதலீடு கடந்த இரண்டு வருடமாக அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் நிறுவன முதலீட்டில் நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் 21.8 சதவீதமும், ஜூலை - செப்டம்பர் காலண்டில் 26.01 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும் அதிகப்படியான அன்னிய முதலீட்டின் காரணமாக நிறுவனத்தின் 18.85 சதவீத பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களிடம் உள்ளது.
இதுமட்டும் அல்லாது ரிசர்வ் வங்கி 30 சதவீதமாக இருந்த அன்னிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்திகொள்ள அக்டோபர் மாதம் அனுமதி அளித்துள்ளது. எனவே முதலீட்டாளர்கள் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை நம்பி பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் மீது முதலீடு செய்யலாம்.