ஜேபி மோர்கன் சேஸ், பேங்க் ஆப் அமெரிக்கா, மற்றும் யுபிஎஸ் ஆகிய நிறுவனங்களும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாத வரை இதை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அமைப்புசார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை அவ்வங்கி விற்கும் என்றும் தெரிகிறது.
இவ்வரசு வங்கி தன்னுடைய முதலீட்டுத் தேவைகளை பசேல்-III விதிமுறைகள் படி பூர்த்திசெய்ய சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாய்களை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திரட்டவேண்டியுள்ளது. இது குறித்து ஆவங்கியின் முதன்மை நிதி அதிகாரி திவாகர் குப்தா தெரிவிக்கையில், பரிமாற்றப் பதிவுகள் படி செப்டம்பர் 2012 வரை, எஸ்பிஐ போதிய முதல் இருப்பு விகிதமாக 12.09 விழுக்காட்டை கொண்டிருந்தாகத் தெரிவித்தார்.
இவ்வங்கி மேலும் ரூபாய் 2,000 கோடி மதிப்புள்ள பங்குகளை அரசிற்கு விற்க உள்ளது. அரசு இவ்வங்கியின் 62.3 விழுக்காடு முதலீட்டை கொண்டிருக்கிறது, இந்த பங்கின் விலை ரூ.1782.74 என்ற விலையில் ஸ்டேட் விங்கி விற்கும். இது குறித்து வங்கி தகவல் தொடர்பு அலுவலர் எம். ஆர்.ரேகி இதுகுறித்து இதுகுறித்து எதுவும் பதிலளிக்கவில்லை.
பதிவு விவரங்கள் படி, அவ்வங்கி முதலீட்டை திரட்டும்போது அதில் அரசின் முதலீடு 58 விழுக்காட்டிற்கு குறைவாக இருக்கலாகாது என்ற நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.