டெல்லி: ஆசியாவில் கண்டத்தில் பொருளாதாரா ரீதியில் மூன்றாவது இடத்தில் உள்ளது நம் இந்தியா தான். மேலும் இந்தியா முன்னேறிய உலகப் பொருளாதார நாடாக மாற கல்வி, விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிகளில் அதிகப்படியான முதலீடுகள் தேவை என தாம் நம்புவதாக குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதை தவிற மாற்று வழிகள் எதும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
"பொருளாதாரத்திலும், நாட்டின் பாதுகாப்பிலும் முதன்மை நாடாக மாற வேண்டும் என்றால், கல்வி, விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்க வேண்டும் இல்லை என்றால் இந்நிலையை அடைவது மிகவும் கடினம் என்பதை நாம் உணர வேண்டும்" என்றார்.
இந்தியா அமர்த்திய சென் மற்றும் வீ ராமகிருஷ்ணன் போன்ற நோபல் பரிசு பெற்றோரை ஈன்றெடுத்துள்ளது என தெரிவித்த அவர் அவர்களின் நேர்மை, கடின உழைப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
"இங்கு திறமையுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குக் குறைவில்லை, ஆனால் அவர்களை கையாளுவதிலும், அமர்த்திய சென், வெங்கட் ராம க்ரிஷன், ஹர் கோபிந்த் கோரானா போன்றோரை உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்துவதிலும் பின்தங்கியிருக்கிறோம்" என அவர் கூறினார்.
1930 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் போன்ற ஒருவரை தற்போதய கல்வியோ அல்லது கற்பிப்பு முறைகளோ என் ஏற்படுத்த முடியவில்லை என திரு முகர்ஜி கேள்வி எழுப்பினார்.