மும்பை: "புண்பட்ட இதயத்தை புகைவிட்டு ஆற்ற வேண்டும்" என்று சொல்லும் நன்பர்களே இனி உங்கள் பட்ஜெட் உயரப்போகிறது. ஐடிசி நிறுவனம் தன்னுடைய சிகரெட் பிராண்டுகளின் விலையை 15 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், டீலர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் விளைவாக பல கடைக்காரர்கள், சிகரெட் பெட்டிகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கும் அதிகமாக வாடிக்கையாளர்களிடம் வாங்குகின்றனர்.
என்னது 10ரூபா அதிகமா??
தற்போது, பத்து சிகரேட்டுகளை கொண்ட நேவி கட் பிராண்ட் சிகரெட் ரூபாய் 60 ஆக உள்ளது. ஆனால் வியாபாரிகள் அதை 69 அல்லது 70 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
பேஷ் பேஷ் நல்ல பதில் போங்கோ..
"விலை உயர்ந்துவிட்டதாக எங்களிடம் தெரிவித்துள்ளனர். ஸ்டாகிஸ்டுகள் எங்களிடம் அதிக விலைக்கு விற்கிறார்கள். அதனால் நாங்களும் வாடிக்கையாளர்களை அதிக விலை தருமாறு கேட்கிறோம்" என்று ஒரு கடைக்காரர் கூறினார். புதிய விலைகளுடன் கூடிய சரக்குகள் அடுத்த வாரத்தில் வரும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
ஐடிசியின் அதிரடி பதில்!! வெறுப்புடன் மக்கள்..
இந்த விலை உயர்வை குறித்து ஐடிசி தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் "விலை உயர்வை குறித்து நாங்கள் இப்போது எதுவும் கூறப் போவதில்லை" என்றார்.
கலால் வரி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு 2013-14 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் சிகரெட்டுக்கான கலால் வரியை உயர்த்தியதை அடுத்து அந்நிறுவனம் சிகரெட் விலைகளை 20 சதவிகிதம் வரை உயர்த்தியது. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் மாநில பட்ஜெட்டில் புகையிலை வரிகளை உயர்த்தின.
3,723.8 கோடி வியாபாரம்
ஐடிசி நிறுவனம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தன்னுடைய சிகரெட் விற்பனையில் 32% சதவிகித லாபத்தை பதிவுசெய்தது. இந்த காலத்தில் சிகரெட் விற்பனை கடந்த ஆண்டின் விற்பனையான ரூபாய் 3723.8 கோடியிலிருந்து 10 சதவிகிதம் உயர்ந்தது குறிப்பிடதக்கது.
விற்பனையில் சரிவு..
எனினும் சிகரெட் விற்பனை அளவு இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்த அளவான (வருட அடிப்படையில்) 2 சதவிகிதமாக இல்லாமல் 5% சதவிகிதமாக குறைந்திருந்தது வல்லுநர்களை கவலையடைய செய்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications