மும்பை: நம் நாட்டின் மிகப்பெரிய இரண்டு சக்கர உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் 2013 டிசம்பர் மாதத்தில் 5,24,990 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளதால் அதன் மொத்த விற்பனை 3% குறைந்துள்ளதாக கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2012ஆம் வருடம் இதே மாதத்தில் இந்நிறுவனம் 5,41,615 வாரகனங்களை விற்பனை செய்தது.
ஜனவரி-டிசம்பர் 2013 கால கட்டத்தில் 61,83,784 வாகனங்களை விற்ற இந்த நிறுவனம், 2012 ஆம் ஆண்டு, இதே காலகட்டத்தில் 61,20,259 வண்டிகளை விற்றுள்ளது. அதன் படி 2013-ல் அதன் விற்பனை 1% அதிகரித்துள்ளது.
விற்பனையை பற்றி கருத்து கூறுகையில், "இந்த வருடம் புதிய அணுகுமுறையை பின்பற்றி, தொழில்நுட்பம், புதுமுறை காணுதல் மற்றும் இளைஞர்களுக்கான வாகனங்கள் என பல புதுமைகளை அறிமுகப்படுத்தி உள்ளளோம். இதனால் மக்களிடத்தில் எங்களின் மீது கவனம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த வருடம் மத்திய அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா போன்ற புதிய சர்வேச சந்தைகளுக்குள் நாங்கள் கால் தாடம் பதித்துள்ளோம்.", என்று ஹீரோ மோடோகார்ப் நிறுவனத்தின் துணைத்தலைவர் (மார்கெடிங் மற்றும் சேல்ஸ்) திரு அணில் துவா கூறியுள்ளார்.
இனி வரும் காலங்களில், தலைமை பொறுப்புகளை மேலும் வலுவூட்ட இந்நிறுவனம் புதிய திட்டங்களை தீட்டியுள்ளது. 2014-ஆம் வருடத்தில் பல புதிய வண்டிகளின் அறிமுகங்கள், புதிய சந்தைக்குள் நுழைதல் மற்றும் கைப்பற்றுதல், ஆரவாரம் நிறைந்த இயக்கங்கள் மற்றும் தொடர்ச்சியான பிணைய விரிவாக்கம் போன்றவைகளுடன் நிறுவனத்தின் செயல் தாக்கங்கள் பலமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.