இதுகுறித்த முடிவுகளை உள்துறை அமைச்சகம் இன்னும் பதில் தராமல் நிலுவையில் வைத்துள்ளது. உள்துறை முடிவுகளுக்காக ரயில்வே துறை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது.
"மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் இந்த குழுவின் பரிந்துரையை உள்துறைக்கு அனுப்பி அதன் பிறகு நினைவூட்டல்களை அனுப்பியும் உள்துறை அமைச்சகம் தன்னுடைய நிலைப்பாட்டினை தெளிவு படுத்தவில்லை. அவர்களுடைய கருத்துக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை" என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தொழில் வளர்ச்சி மற்றும் ஊக்குவித்தல் துறை செயலர் இது குறித்து ரயில்வே துறை செயலருக்கு விரைவில் ஒரு கடிதம் எழுத இருப்பதாக தகவல்கள் தெரிவித்ததோடு எந்த ஒரு எதிர்மறை விமர்சனமும் இந்த பிரச்சினையை மேலும் தாமதப்படுத்தும்.