55,000 பணியிடங்களை நிரப்ப டிசிஎஸ் நிறுவனம் முடிவு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: டாடா குழுமத்தின் தூண் என போற்றப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் 2013-14 ஆம் ஆண்டின் பணியமர்த்தல் இலக்கான ஐம்பதாயிரம் என்ற இலக்கை மேலும் உயர்த்தியுள்ளது. அதனால் டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டும் மட்டும் சுமார் 55,000 பணியிடங்களை நடப்பாண்டில் நிரப்ப உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல செய்தி என்றே சொல்லலாம்.

 

இந்தியாவின் மிகப்பெரும் பீபிஒ நிறுவனமான டிசிஎஸ் பத்து பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயும் சுமார் மூன்று லட்சம் பணியாளர்களையும் கொண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வரும் 2014-15 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் இருபத்தைந்தாயிரம் பட்டதாரிகளை வளாகத் தேர்வு முறையில் பணியமர்த்தவுள்ளதாக அதன் குழும மனிதவளத் துறை இணைத் தலைவர் அஜொய் முகர்ஜி தெரிவித்தார். பிற பணியமர்த்துதல்கள் பின்வரும் சேர்ப்புகளிலும் வெளிநாட்டு ஆள் சேர்ப்பிலும் மேற்கொள்ளப்படும் என்றார்

அமெரிக்கப் பொருளாதார உயர்வு..

அமெரிக்கப் பொருளாதார உயர்வு..

உலகின் மிகப்பெரும் பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேறி வரும் நிலையில், இந்திய பிபீஒ நிறுவனங்களுக்கு தகவல்தொடர்புத் தொழில் ஏற்றுமதிகள் 60 சதவிகிதம் வரை உயரவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

77.5%  உயர்வு..

77.5% உயர்வு..

டிசிஎஸ் நிறுவனம் 5463 பேரை பணியமர்த்தியதுடன், இதில் முதல் நிலை பணியாளர்களும் அடங்கும் உள்ளிட்ட பணியாளர்களின் உபயோகம் 77.5 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்திருந்த்து. பணியாளர் வெளியேற்றம் 10.9 சதவிகிதம் என்ற குறைந்த அளவில் இருந்தது.

பணியாளர் வெளியேற்றம்

பணியாளர் வெளியேற்றம்

இதற்கு மாறாக, ஒன்றரை லட்சம் பேர் பணியாற்றும் இன்போசிஸ் நிறுவனம் பணியாளர் வெளியேற்றம் 18.1 என்ற அளவில் முன் எப்போதும் இல்லாத அளவாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

15,000 பணி நியமனம்
 

15,000 பணி நியமனம்

டிசம்பர் வரை முடிந்த காலாண்டில் சுமார் 6,342 முதல் நிலை பணியாளர்கள், 5,492 அனுபவமுள்ளவர்கள் மற்றும் 2,831 வெளி நாட்டு பணியாளர்கள் உட்பட மொத்தம் 14,663 பேரை நியமித்தது.

விற்பனை சரிவு

விற்பனை சரிவு

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் அக்டோபர் மற்றும் டிசம்பர் வரையிலான காலாண்டில் எதிர்பார்த்த்தை விட அதிக லாபமும் சற்று குறைந்த விற்பனை வளர்ச்சியும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS raises hiring target to 55000

Tata Consultancy Services on Thursday said it will hire another 5,000 employees for the current financial year ending March 2014. The company raised its hiring overall hiring target to 55,000 for 2013-14 from 50,000.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X