பெங்ளுரூ: மும்பை பங்கு சந்தையில் இந்த வாரம் முழுவதும் வர்த்தகம் எதிர்பார்த்த அளவைவிட குறைவாகவே இருந்தது. இதனால் வாரத்தின் முதல் நாழ்கு நாட்கள் பங்கு சந்தை சரிவை சந்தித்து. ஐந்து நாளான வெள்ளிகிழமை வர்த்தகம் உயர்ந்து முதலீடாளர்கள் வயிற்றில் பாலை வாற்றது. மேலும் மும்பை பங்குச் சந்தையின் வெள்ளிகிழமை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்' 16 புள்ளிகள் அதிகரித்தது.
கடந்த ஐந்து தினங்களில் சென்செக்ஸ் மொத்தம் 875 புள்ளிகளை இழந்தது. இதனால் சிறப்பாக செயல்படும் பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து மண்ணை கவ்வியது. இந்த அறிய வாய்ப்பை பஸன்படுத்தி முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர்.

அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இந்திய சந்தைக்கு சாதகமாக அமைந்தது. அதேசமயம், ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் மந்தநிலை காணப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்திய வங்கி துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் பஞ்சாப் நேஷனல் பேங்கின் வாராக்கடன் அளவு குறைந்து இதனால் பாங்க் ஆஃப் பரோடா, எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட பல வங்கி பங்குகள் அதிக விலைக்கு வர்த்தகம் செய்யப்பட்டன். மேலும் ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொறியியல் ஆகிய துறைசார்ந்த பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டன. அதேபோல், ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்த பங்குகளின் விலை குறைந்து.


Click it and Unblock the Notifications