ரூ.13,000 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை விற்றது ரிசர்வ் வங்கி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூ.13,000 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை விற்றது ரிசர்வ் வங்கி..
மும்பை: ரூபாய் 13000 கோடி மதிப்புள்ள அரசுக் கடன் பத்திரங்களை பன்முனை விலை ஏல முறையில் ஆர்பிஐ புதன்கிழமை விற்றது.

"ரிசர்வ் வங்கி 364 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 6,000 கோடி ரூபாய் இந்திய அரசு கருவூல பத்திரங்களையும், 91 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களையும் பன்முனை விலை ஏல முறையில் விற்றது" என ஆர்பிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

 

ஏல விண்ணப்பங்களை மின்னணு பதிவாக ஆர்பிஐ-யின் கோர் பாங்கிங் சொல்யூஷன் மூலமாக பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30-மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. போட்டியற்ற விண்ணப்பங்கள் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

 

இதன் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். ஏலத்தில் தேர்வு பெற்றவர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதி பணம் செலுத்த வேண்டும் என அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI to auction govt securities worth Rs 13,000 cr on Feb 5

The Reserve Bank of India on Friday announced the auction of government securities for notified amount of Rs 13,000 crore on February 5 using "Multiple Price Auction" method.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X