டெல்லி: இண்டர்நெட் மற்றும் மொபைலின் ஆதிக்கம் உலகின் எந்தொரு பகுதியையும் விட்டு வைக்கவில்லை நடுக்காட்டில் இன்டர்நெட், பாலைவனத்தில் மொபைல் நெட்வொர்க் என தொழில்நுட்பம் பல பரிமானங்களில் வளர்ந்துள்ளது. ஆனால் வங்கி துறையில் மட்டும் மொபைல் சேவையின் ஆதிக்கம் குறைவாகவே உள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு செய்தி.
சுமார் 90 கோடி மொபைல் ஃபோன் இணைப்புகள் மற்றும் 45 கோடி வங்கிக் கணக்குகள் ஆகியவற்றில் வெறும் 6.7 கோடி ஃபோன்கள் மட்டுமே வங்கிக்கணக்குகளோடு தொடர்புடையவாக இருப்பதாகவும் இது மொபைல் வங்கிச்சேவைத் திட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய செலுத்துகை நிறுவனம் (நேஷனல் பேமென்ட்ஸ் கார்போரேஷன்) தெரிவித்துள்ளது.
மொபைல் வாடிக்கையாளர்
நாட்டில் உள்ள மொத்த மொபைல் இணைப்புகள் 90 கோடியாகும் அதில் செயல்பட்டில் உள்ள மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 கோடியிலிருந்து 60 கோடியாக உள்ளது. இதில் 90 சதவிகிதம் அல்லது 40 கோடி உபயோகிப்பாளர்கள் மட்டுமே வங்கிக் கணக்குகள் வைத்துள்ளனர்.
வங்கிக் கணக்கு
இந்தியாவில் 6.7 கோடி மொபைல் எண்கள் மட்டுமே அவற்றின் வங்கிக் கணக்குகளோடு இணைக்கப்பட்டுள்ளன என தேசிய செலுத்துகை நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி அபே ஹோதா வார இறுதியில் நடைபெற்ற நிதிச் சேர்க்கை மற்றும் செலுத்துகை முறைமைகள் தொடர்பான மாநாட்டில் தெரிவித்தார்.
எஸ்எம்எஸ் அறிக்கை
ஆர்பிஐ-யும் ஒவ்வொரு வங்கிப்பரிவர்த்தனைக்கும் குறுஞ்செய்தி எனப்படும் எஸ்எம்எஸ் அனுப்பவேண்டியது அவசியம் என்று கூறியிருந்தாலும் இது ஒவ்வொரு வாடிக்கையாளரும் நன்கு சேவையை பெற்றால் மட்டுமே சாத்தியம் என ஹோதா தெரிவித்தார்.
வங்கிச் சேவை மென்பொருள்
அவர் மேலும் மொபைல் வங்கி மென்பொருள்களைப் பதிவிரக்கம் செய்வதன் அவசியம் குறித்துப் பேசியனார் யுஎஸ்எஸ்டி எனப்படும் "*99# என்ற குறியீடு மிகவும் முக்கியமானதாகும் கணக்கு இருப்புத் தகவல்கள் மற்றும் செலுத்துகை ஆகியவற்றில் மொபைல் ஃபோன்களை கொண்டு செய்ய ஏற்றவகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்,
தாய் மொழியில் வங்கி சேவை
மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளூர் மொழிகளில் சேவை வழங்கும் வரை மொபைல் வங்கி சேவை நன்கு துவங்க இயலாது என்று கூறிய அவர் "உள்ளூர் மொழிகளில் சேவை வழங்கும் வரையில் பணப்பரிமாற்றங்களின் சேர்ப்பு சாத்தியமாகாது" என்றார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications