டெல்லி: வங்கித் துறையை அடுத்து மத்திய அரசு அதிகாரிகள் 7வது மத்திய சம்பள கமிஷன் மீது சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது, இதனால் மத்திய அரசின் முக்கிய சேவைகள் அனைத்தும் பாதிேத்தது.
இந்த வேலை நிறுத்தத்தில் தபால், ரயில் அஞ்சல் சேவை, வருமான வரி, மத்திய கலால், கணக்காய்வு மற்றும் கணக்குகள், இந்திய சர்வே மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட சுமார் 40 துறைகள் இணைந்து மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் கூட்டமைப்பு (CCGEW) தலைமையில் ஈடுப்பட்டு வருகிறது.
இந்த வேலை நிறுத்ததால் நகரத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகம் பாதிக்கப்பட்டுள்ளது, சிற்றூர்களில் அதன் பாதிப்பு இன்னும் அதிகம் என மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் திரு. பி.எஸ்.பிரசாத் தெரிவித்தார்.
இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாது தபால் துறையே, நேற்று மற்றும் இன்று இந்தியா முழுவதும் தபால் துறை முற்றிலும் முடங்கியது. இதனால் தாபல் விநியோகம், மனி ஆர்டர், என அனைத்து வங்கி துறை சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
15 முக்கிய கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் கூட்டமைப்பு 7ஆம் சம்பள கமிஷனுக்கு 15 கோரிக்கை அடங்கிய ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளது. இதில் 5 வருடங்களுக்கு ஒரு முறை அனைத்து மத்திய உழியர்களுக்கும் கட்டாய சம்பள உயர்வு, காலியான பணியிடங்களை நிரப்புதல், ஆட்குறைப்பை குறைத்தல், அரசு வேலையை தனியார் மயமாக்கல் என பல முக்கிய கோரிக்கைகளை விடுத்துள்ளது.