மும்பை: மத்திய மின் பரிமாற்ற அமைப்பான பவர் க்ரிட் கார்ப்பரேஷன் 2016ஆம் ஆண்டின் மத்தியில் மேற்கொள்ள வேண்டியதான அதன் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கென சுமார் 1,900 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இம்மாத துவக்கத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது இவ்வாரியம் வடக்குப் பகுதியில் இரண்டு ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டங்களை வலுப்படுத்தும் திட்டங்களுக்காக சுமார் 908.08 கோடி ரூபாயையும், சுமார் 539.82 கோடி ரூபாயையும் ஒதுக்கீடு செய்துள்ளது என்று மும்பை பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் பவர் க்ரிட் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.
மேலும் லோடு டெஸ்பாட்ச் மையங்களின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கென சுமார் 56.18 கோடி ரூபாயையும் இவ்வாரியம் ஒதுக்கியுள்ளது.
சுமார் 167.40 கோடி ரூபாய் மதிப்பிலான என்டிபிஸி துணை மின் பிரிமாற்ற பணிகளுக்கான ஒப்பந்தம் ஒன்றும், மற்றொரு 243.53 கோடி ரூபாய் மதிப்பிலான தென்னகப் பகுதி அமைப்பை வலுப்படுத்தும் திட்டம் ஒன்றும் கூட இவ்வாரியத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாக இந்த அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2013 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த இந்த மூன்று மாத காலகட்டத்தின் போது, அதிகரித்திருக்கும் நிதி மற்றும் வரி செலவீனங்களுக்கு பிறகு 1,042.04 கோடி ரூபாய் வரை நிகர லாபம் கிடைத்துள்ளதாக இந்நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது..
கடந்த ஆண்டின் போது 3,368 கோடி ரூபாயாக இருந்த விற்றுமுதல், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் போது சுமார் 3,684.55 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் சுமார் 0.16 சதவீதம் என்ற வீதத்தில் 95.30 ரூபாயுடன் நிறைவடைந்துள்ளது.