Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
டெல்லி: 2015-ஆம் ஆண்டில் மொத்த உற்பத்தியின் அடிப்படையில் ஏற்படக்கூடிய 4.2 சதவிகித வருவாய் பற்றாக்குறையினை முன்னிட்டு அரசு 5.8 முதல் 6 லட்சம் கோடி வரை கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி கருத்து தெரிவித்துள்ளது.
அனைலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதகவே வரும் திங்களன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.
கடனை திரும்ப செலுத்த நடப்பாண்டை ஒப்பிடும்போது 2015-ஆம் ஆண்டில் அதிக நிதி இருப்பை பராமரிக்க அரசு திட்டமிடக்கூடும் என ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி மேலும் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட தேசிய சேமிப்பு அளவான 36,100 கோடி ரூபாயை விட அதிமாக சேமிப்புகள் பெறப்பட்டதால் 15,000 கோடி ரூபாய் அளவிலான ஏலங்கள் ரத்து செய்யப்பட்டபோதும் 2013-2014 ஆம் ஆண்டு முடிவில் அரசு வசம் உபரி நிதியாக 1 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என அவ்வங்கி தெரிவித்தது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary