டெல்லி : இன்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் 15வது லோக்சபா இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டை அனைத்து தரப்பினரும் மிகுந்த அவளுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த பட்ஜெட் அறிக்கை மத்திய அரசுக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே இந்த இடைகால பட்ஜெட்டில் பல சிறப்புத் திட்டங்கள் அடங்கியுள்ளது என்று சொன்னால் மிகையாகது.
இந்த இடைகால பட்ஜெட்டில் மத்திய அரசு சமூக நல திட்டங்களுக்கு முக்கியதுவம் அளித்துள்ளது, குறிப்பாக கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு மத்திய அரசு அதிகளவில் நிதி, சலுகை, சிறப்பு திட்டங்கள் ஒதுக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த இடைகால பட்ஜெட், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 10 வருடத்தில் என்ன சாதித்தது எனவும் தெளிவாக தெரிந்துவிடம். அந்த பட்ஜெட் தாக்கலை எதிர் கட்சியான பாஜகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது.
பொதுவாக மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் என்றாலே அதிக அளவில் மானியங்கள், நிதி தள்ளுபடி, கடன் தள்ளுபடி போன்றவை முக்கிய இடம்பெரும். அதேபோல் இந்த இடைகால பட்ஜெடிலும் மானியங்களுக்கு அதிக அளவிலான நிதியை ஒதுக்கிய மத்திய அரசு, முக்கிய துறைகளான கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை புறக்கணித்துள்ளது தெரிய வந்துள்ளது.
சற்று முன்பு நிதிஅமைச்சர் திரு ப. சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யத் துவங்கினார்.