Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு செயற்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தியறிக்கைத் தெரிவிக்கிறது. எனினும், இதற்கான காலக் கெடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை என மாநிலங்களவையில் அரசுப் பணியாளர்கள் துறை இணையமைச்சர் வி நாராயணசாமி தெரிவித்ததாக பிடிஐ செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.
"இந்திய அரசு ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று இந்தத் திட்டத்தினை அனுமதி வழங்கியுள்ளது". இந்த ஊக்கத்தொகை, வழக்கமான சம்பளத்தொகைக்குக் கூடுதலாக, நிர்ணயிக்கப்பட்ட செயல் இலக்கு மற்றும் அது தொடர்பான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்படாத நிதிச் சேமிப்புகளிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் என நாராயணசாமி எழுத்து மூலமான பதிலில் தெரிவித்தார்.
இனி அரசு ஊழியர்களும் தீயாய் வேலை செய்வார்கள்.. அப்படிதான மிஸ்டர் நாராயணசாமி..
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary